Header Ads

  • சற்று முன்

    ஓசூரில் பெண் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி வருவாய்த்துறை மற்றும் போலீசார் விசாரணை



    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோட்டாட்சியர் அலுவலக்தில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி வருவாய்த்துறை மற்றும்  போலீசார் விசாரணை.

    ஓசூர் கோட்டாட்சியர்  அலுவலகத்தில்  மனு அளிக்கும் நாள் என்பதால் பல கிராம மக்கள் தங்களின் தேவைகளை முன்னிட்டு மனு அளிக்க வந்திருந்தனர்.  அதுப்போலவே  ஓசூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஓசூர் அருகே உள்ள குமுதேப்பள்ளியை சேர்ந்த  குண என்கிற சர்குணம்(38) இவர் தன்னை ஏமாற்றியவர் எனக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் நான் பிறந்த வீட்டில் எனது பெற்றோர் சொத்தில் எனக்கு பங்கு தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்து  மனு கொடுக்க வந்தார்.

    அப்போது திடீரென சர்குணம் ஏற்கனவே தான் கொண்டு வந்திருந்த கேனிலிருந்த மண்ணெண்ணெய்  உடலில்  ஊற்றிக்கொண்டும்,சுமார் 10 க்கும் மேற்பட்ட வலி நிவரண மாத்திரைகள் சாப்பிட்டும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.அங்குள்ளவர்கள் தடுக்க முயன்றும் முடியவில்லை உடனடியாக அங்குள்ள பொது மக்கள் மற்றும் போலீசார் உடனடியாக சர்குணவை மீட்டி ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அதன் பேரில் வருவாய்த்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad