திருவாடானை அரசு மருத்துவ மனையில மூலிகை மரக்கன்றுகளை நட்டனர்
திருவாடானை அரசு தலைமை மருத்துவ மனையை சுற்றி 200 மூலிகை மரக்கன்றுகளை நட்டு பாமரிக்கும் துவக்கநிகழ்சிசி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் அரசு தலைமை மருத்துவ மனை உள்ளது. இந்த அரசு மருத்துவ மனையில் உள்ள காலியிடங்களில் திருவாடானை தனியார் பேக்கரி உரிமையாளர் சரத்குமார் தனது செலவில் 200 மூலிகை மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் நிகழ்ச்சின் துவக்க நிகழ்ச்சி நடபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவாடானை மருத்துவ மனை மருத்துவர் ராஜ்குமார், தாசில்தார் சேகர், துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார், மின்சாரவாரிய செயர்பொறியாளர் ஜோசப் மற்றும் நல்லாசிரியர் விருபெற்ற உதயகுமார் ஆகியோர்கள் மூலிகை மரகன்றுகளை நட்டனர். வரும் நாட்களில் 200 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க இருப்பதாக தெரிவித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் சந்தானராஜ், சிவசண்முகம், சதீஸ்குமார் ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள்.
திருவாடானை - லெ.ஆனந்த குமார்
கருத்துகள் இல்லை