தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் விழா
வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் வியாசர்பாடி டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர் ஜாய் பனகல் தலைமையிலும் ஜெ.கே.ரமேஷ், வட்ட செயலாளர் வி.கோபி முன்னிலையில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் T.G.வெங்கடேஷ்பாபு வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் .R.S. ராஜேஷ் ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கினார்.இந்த விழாவில் நடன நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
செய்தியாளர் : கொடுங்கை ஹரி
கருத்துகள் இல்லை