Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருத்தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு



    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்தமாதம் 24­ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  விழாவின் முக்கிய திருநாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது இதனை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கபட்டு. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் ரதரோகணம் நடைபெற்றது. பின்னர் வணிக வைசிய சங்கத்தினர் மண்டகப்படிதாரர்கள் சார்பில்; தேரோட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக செய்தி மற்றும் விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


    நிகழ்ச்சியில் வணிகவைசிய சங்க தலைவர் பூவலிங்கம், செயலாளர் பழனிகுமார், வணிக வைசிய பள்ளி குழு தலைவர் வெங்கடேஷ், பள்ளிகுழு தலைவர் நடராஜன், சங்க பொருளாளர் கருப்பசாமி, துணை தலைவர் காளியப்பன், துணை செயலாளர் வேல்முருகன், மணிமாறன், சுப்பிரமணியன் ஆசிரியர் நினைவு பள்ளி செயலாளர் மகாலிங்கம், சங்க நிர்வாகிகள் மாதவராஜ், தங்கமாரியப்பன், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ரத்தினவேல், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பரமசிவன் மேலும் கோல்டன் குரூப்ஸ், ஸ்ரீ கண்ணகி பாய்ஸ் நண்பகர்கள் குழு உள்ளிட்ட மண்கபடிதாரர்களும், அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், ஊராட்சி செயலாளர் ரமேஷ், இனாம் மணியாச்சி கூட்டுறவு வங்கி தலைவர் மகேஷ்குமார், ஜெ பேரவை பொருளாளர் வேலுமணி, கோவில் அதிகாரிகள் மேலும் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு அம்பாள் சுவாமியை தரிசித்தனர்.  இன்று இரவு 7.30 மணிக்கு வணிக வைசிய சங்கம் சார்பில் மெயின் ரோட்டில் உள்ள 9ம் நாள் திருநாள் மண்டபத்தில் வைத்து அம்மனுக்கு சிறப்பு அலங்கர மற்றும் தீபாராதனைகள் நடைபெறும் பின்பு அங்கு இருந்து அன்னவாகனத்தில் திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.


    10 ம் நாள் திருநாளான 2 ந் தேதி நாளை காலை அம்மன் பல்லக்கில் திரு வீதி உலா, இரவு 7.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி நடக்கிறது. 
    11ம் நாள் திருநாளான 3 ந் தேதி மதியம் 1 மணிக்கு தபசு சப்பரத்தில் அம்மன் தபசுக்கு எழுந்தருளுகிறார். மாலை 6 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் பூவனநாதராக அம்மனுக்கு காட்சி கொடுக்கிறார். 12 ம் நாளான 4ஆம் தேதி காலை 8 மணிக்கு பல்லக்கில் அம்மன் திருவீதிஉலா நடைபெறுகிறது. அதை தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின்னர், சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் பட்டணப்பிரவேசம் செல்லும் வைபவம் நடைபெறும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad