Header Ads

  • சற்று முன்

    பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம்


    பெருந்தலைவர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நவம்பர் 15ந் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மடப்புறத்தில் உள்ள காமராஜர் குடிலில் நடைப்பெற்றது. 

    மதுரை மத்திய மாவட்ட செயலாளர் முட்டை செல்வம் தலைமையிலும் மதுரை மாநகர செயலாளர் சபரி செல்வம் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் ராமஜெயம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
    முன்னதாக சிவகங்கை மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர் சிவக்குமார் மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி.ஆர்.விஜய்மாரிஸ் மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர் ஹெலன் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட மாற்று சமுதாய பெண்கள் பெருந்தலைவர் மக்கள் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். பெருந்தலைவர் மக்கள் கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்டம் சிவகாசி நகர தலைவர் விக்னேஸ்வரன்,  நகர பொருளாளர் சிவபிரதீப்,  மதுரை மத்திய மாவட்ட மகளிரணி தலைவர் கீதாபாலு,  மதுரை மாநகர் மகளிரணி செயலாளர் நாகஜோதி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மதுரை மத்திய மாவட்ட மகளிரணி செயலாளர் விக்டோரியா ஏற்பாடு செய்திருந்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad