பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய நியாவிலை கடைக்கு அடிக்கல் நாட்டினார்
பழனி தேரடியில் உள்ள 14,15 வது வார்டுகளுக்கான புதிய நியாய விலைக் கடைக்கு அடிக்கல் நாட்டும் பணியைத் பழனி சட்ட மன்ற உறுப்பினர் செந்தில்குமார் தொடங்கிவைத்தார். உடன் வேலுமணி, உமாமகேஷ்வரி, தமிழ்மனி, செளந்திரப்பாண்டி, பழனிச்சாமி,பிரபாகரன்,இந்திரா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் சட்ட மன்ற உறுப்பினர் செந்தில்குமார் பேசுகையில் பழனி நகரத்திற்குட்பட்ட தேரடியில் உள்ள 14,15 வது வார்டு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய நியாய விலைக்கடை,குடிநீர் பற்றாக்குறை,
பொதுகழிப்பிட வசதி,சுகாதாரமான சாக்கடை வசதி,போன்ற கோரிக்கைகளை வைத்தனர்.அதன் அடிப்படையில் இன்று சில அடிப்படை வசதிகளை என்னுடைய மேம்பாட்டு நிதியில் இருந்து செய்து தருகின்றேன். விரைவில் வார்டு பொதுமக்களின் தேவைகள் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.சட்ட மன்ற உறுப்பினர் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி விழாவினை முடித்து வைத்தார்...
செய்தியாளர்
பழனி சரவணக்குமார்...
கருத்துகள் இல்லை