மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி உணவு மற்றும் பாதுகாப்பு துறையை சேர்ந்த சென்னையிலுள்ள 17 மண்டலங்களில் வரும் சனிகிழமை (13.10.18) அந்தந்த உதவி ஆணையர் அலுவகத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 வரை நடைபெறவுள்ளது.
இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொது மக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் போன்றவற்றை சரி செய்வதுடன் தங்கள் நியா விலை கடைகளில் உள்ள குறைபாடுகளை அதிகாரிகளுக்கு தெரிவித்து சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
செய்தியாளர் : பொன் முகரியன்
கருத்துகள் இல்லை