ஓசூர் அடுத்த தேன்துர்க்கத்தில் வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்து கூலித்தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி அருகே உள்ள தேன்துர்கம் கிராமத்தில் பழைய மணினால் கட்டப்பட்ட வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேன்துர்க்கம் கிராமத்தை சேர்ந்த ராஜன்னா வின் இடிந்த நிலையிலிருந்த பழைய மண் வீட்டின் கூரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 55 வயது மதிக்கத்தக்க கிருஷ்ணன் என்பவர் மீது வீட்டின் மண்சுவர் எதிர்ப்பாராத விதமாக இடிந்து விழுந்ததில் கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த உத்தனப்பள்ளி போலிசார் உயிரிழந்த கிருஷ்ணன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். வேலை செய்து கொண்டு இருந்தவர் மீது, வீட்டின் சுவர் விழுந்து பலியானதால் அப்பகுதியில் பரபரப்பை
ஏற்ப்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை