இரத்ததான முகாமில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள்
திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை ரத்தவங்கியுடன் கல்லூரி செஞ்சிலுவைச் சங்கம், இளம்சிவப்பு நாடா மற்றும் நாட்டுநலப்பணிகள் இணைந்து ரத்தான முகாமை நடத்தின. கல்லூரி முதல்வர் முனைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செஞ்சிலுவைச் சங்க மாவட்ட செயலாளர் ராக்கிலன் மதுரைம் முன்னிலை வகித்தார். இந்த முகாமை செஞ்சிலுவைச் சங்க மாவட்ட தலைவர் ஹாரூன் துவங்கி வைத்தார்.
இந்த முகாமில் கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் தாங்களாக முன்வந்து ஆர்வத்துடன் தங்களது ரத்தத்தை வழங்கினார்கள். இந்த முகாமில் மருத்துவர் பதுல்ராணி பாத்திமா கலந்துகொண்டார். இந்த முகாம் ஏற்பாடுகளை செஞ்சிலுவைச் சங்கம் ஒருங்கிணைப்பாளர் ராம்மூர்த்தி, நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், இளஞ்சிவப்பு நாடா சங்க ஒருங்கிணைப்பாளர் மதுரம் மற்றும் மாவட்ட ரத்த வங்கி அலுவலர் ஐய்யப்பனள் ஆகியோர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.
கருத்துகள் இல்லை