Header Ads

  • சற்று முன்

    பெற்றோருடன் ஆற்றில் குளிக்கச் சென்றபோது மாயமான மாணவன் சடலமாக மீட்பு


    அரியலூர் அருகேயுள்ள திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை திருமானூர் காந்திநகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் அவரது மனைவி நதியா மற்றும் அவரது 2 மகன்கள் சந்ரு, சூர்யா ஆகியோருடன் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக சுப்பிரமணியன் குடும்பத்தினர் குளித்துக் கொண்டிருக்கும் போது அவரது இளைய மகன் சூர்யா ஆற்றில்  மாயமானார். இதனையடுத்து தீயணைப்பு படை வீரர் நேற்று இரவு எட்டு மணிவரை மாயமான சூர்யாவின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர. இரவு நேரம் என்பதாலும் வெளிச்சம் இன்மை காரணமாகவும் தேடுதல் பணியை நேற்று இரவு ஒத்தி வைத்துவிட்டு இன்று காலை தொடரும் என தீயணைப்புத் துறையினர் அறிவித்திருந்தனர்.

    இதனையடுத்து இன்று காலை 6 மணி முதல் மாயமான நான்காம் வகுப்பு மாணவன் சூர்யாவை தேடும் பணியில் தீயணைப்பு துறை வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் கொள்ளிடம் ஆற்றின் மறு கரை ஓரத்தில் சூர்யாவின் உடல் புதைந்திருப்பதை தீயணைப்புத்துறை கண்டறிந்தனர். இதன் பின்னர் மாணவன்  சூர்யாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரியலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து திருமானூர்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் : தங்கம் பாலா 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad