Header Ads

  • சற்று முன்

    பெட்ரோல் டீசல் விலை கட்டுபடுத்த முடியாது - கையை விரித்த மத்திய அமைச்சர்



    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு போன்ற சர்வதேச காரணிகளே காரணம் என்று தெரிவித்துள்ள பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், விலை உயர்வை கட்டுப்படுத்துவது மத்திய அரசின் கைகளில் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். 



    பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் இருந்து தற்போது வரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 50 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. எரிபொருள் விலையை குறைக்காததால், மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்திய ரூபாயின் மதிப்பு மற்ற வெளிநாட்டு கரன்சியை விட தற்போது வலிமையாகவே இருப்பதாக கூறினார். ஆனால் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ள நிலையில், கச்சா எண்ணெயை  டாலர் மூலமாகவே வாங்க வேண்டியிருப்பதே நமக்கு பிரச்சினையை உருவாக்குவதாக கூறினார்.

    கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான "ஒபெக்", ஜூலை ஒன்றாம் தேதி முதல் நாளொன்றுக்கு 10 லட்சம் மெட்ரிக்டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதாக உறுதி அளித்திருந்ததை குறிப்பிட்டார். ஆனால் அந்த இலக்கு எட்டப்படவில்லை என்பதுடன், ஈரான் விவகாரம், வெனிசுலா மற்றும் துருக்கியில் நிலவும் நிதி நெருக்கடி போன்ற சர்வதேச காரணிகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறினார். இவைகளை எல்லாம் சரி செய்வது இந்தியாவின் கைகளில் இல்லை என்பதால், பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad