Header Ads

  • சற்று முன்

    மழை வளம் பெருக வேண்டி கோவில்பட்டியில் கஞ்சி கலய ஊர்வலம்


    மழைவளம் பெருக வேண்டி கோவில்பட்டியில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.


    மழை வளம் பெருகவும், இயற்கை சீற்றங்கள் தணியவும், மக்கள் மனித நேயத்துடன் வாழவும், தொழில் வளம் பெருகவும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.இதில் செவ்வாடை அணிந்த பெண் பக்தர்கள் கஞ்சி கலயம், அக்கினி சட்டி, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். வழிபாட்டு மன்றத்தில் தொடங்கிய ஊர்வலத்தை வட்டாட்சியர் லெ.பரமசிவன், அதிமுக நகர முன்னாள் செயலாளர் எஸ்.சங்கரபாண்டியன் தொடங்கி வைத்தனர்.


    ஊர்வலம் மந்தித்தோப்பு ரோடு, எட்டயபுரம் ரோடு, மாதாங்கோவில் ரோடு, தெற்கு பஜார் ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் வழியாக மீண்டும் மன்றத்தை அடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் தூத்துக்குடி வட்டாட்சியர் பி.வள்ளிகண்ணு, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ஆர்.ஜெகநாதன், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற மாவட்ட தலைவர் அய்யாச்சாமி, மாவட்ட பொருளாளர் வடிவேல்ராஜன், உப தலைவர் பண்டார முருகன், ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது


    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
    nms today youtube channel subscribe செய்யவும் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad