கோவில்பட்டி அருகே புதிய பேருந்து நிறுத்தம் திறப்பு அமைச்சர் பங்கேற்பு
கயத்தார் நகரின் மையப்பகுதியில் பயணிகளின் வசதிக்காக புதிய பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூவிடம் கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் 7 லட்ச ரூபாய் செலவில் கயத்தார் நகரின் மையப்பகுதியில் பேருந்து பயணிகளின் வசதிக்காக புதிய பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிறுத்தம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கோட்டாட்சியர் விஜயா, கயத்தார் தாசில்தார் லிங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு புதிய பேருந்து நிறுத்ததினை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கயத்தார் நகர செயலாளர் கப்பல்ராமசாமி, தலைமைக்கழக பேச்சாளர் அல்லிகண்ணன், கயத்தார் முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் முருகன், கோவில்பட்டி அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், இனாம்மணியாச்சி ஊராட்சி செயலாளர் ரமேஷ், துறையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கணேசபாண்டியன், இனாம்மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் மகேஸ்குமார், கயத்தார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சுடலை, ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் வண்டானம் கருப்பசாமி, அதிமுக நிர்வாகிகள் பாலமுருகன், ஜெமினி(எ) அருணசலசாமி, பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை