Header Ads

  • சற்று முன்

    ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து


    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சப்படி என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் கனரக வாகனங்கள் ஒன்றோடு ஒன்றாக மோதிய விபத்தில் 3 பேர் காயம் ஒருவர் பலியானார்

    பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில்  சூளகிரி அருகே சப்படி என்ற இடத்தில் பால்  லாரி,டிப்பர் லாரி, டேங்கர் லாரி மற்றுமொரு பார்சல் சர்வீஸ் லாரி என ஒன்றன்பின் ஒன்றாக  மோதிக்கொண்டன, இந்த விபத்தில் லாரி டிரைவர் திண்டிவனத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் பலியானார் 3 பேருக்கு காயங்கள் ஏற்பட்டது, இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது

    சம்பவயிடத்திற்கு வந்த சூளகிரி போலீஸார் பலியானவரின் உடலை மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர், பின்னர் போக்கு வரத்தை சீர் செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad