Header Ads

  • சற்று முன்

    ஓசூரில் கல்லூரி மாணவன் காரில் விஷவாயு தாக்கியதில் மயங்கிய நிலையில் பலி



    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஸ்ரீ நகர் பகுதியைச் சேர்ந்த ரக்ஷித் (21) S / o ஹரிநாத், இவர்  திருச்சியில் NIIT பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்,

    நேற்று கல்வி சம்பந்தமாக செயல்முறை ஆய்வுக்காக கார்பன் மோனோ ஆக்ஸைடு கேஸ் சிலிண்டரை தன் காரில் எடுத்து வரும்போது கேஸ் கசிவு ஏற்பட்டு ஓசூர் அருகே இஎஸ்ஐ மருத்துவமனை முன் காரிலியே கல்லூரி மாணவன் மயங்கிய நிலையில் உயிரிழந்தான்.



    ரக்ஷித் தந்தை ஹரிநாத்  தன்னுடய கைபேசி மூலம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது, வெகு நேரமாகியும் ரஷித் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்து அவரது செல்ஃபேனுக்கு தொடர்பு கொண்டுள்ளார், செல்ஃபேன் ரீங்கிங் ஆகும் நிலையில் அதை தொடர்பு கொள்ள முடியவில்லை, இதனால் பயந்து போன ரக்ஷித் தந்தை தனது ஃபோன் செயலி மூலம் வரைப்படத்தை தெடர்பு கொண்டதில் அவரின் செல்ஃபேன்டவர் ஓசூர் உல் வட்ட சாலையில் உள்ள இஐசி பகுதியை காண்பித்தது.

    இதை தொடர்ந்து அவர் தந்தை செல்ஃபோன் லோகேஷன் காட்டிய இடத்தில் சென்று பார்த்ததில் காரின் உள்ளே மயங்கிய நிலையல் ரக்ஷித்தை கண்டுள்ளார் உடனே கார் கண்ணாடி உடைத்து அவரை உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமணைக்கு கொண்டு வந்துள்ளனர் ரக்ஷித்தின் உடலை பரிசோதித்த மருத்துவர் அவர் எர்கனவே இறந்து விட்டதாக கூற.உடலை பிரேத பரிசோதனைக்காக  கொண்டு சென்றனர், சிப்காட் போலீஸார் இத குறித்து வழக்கை பதிவு செய்தது தற்கொலையா விபத்தா என்ற கோணத்தில்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எமது செய்தியாளர் : கிருஷ்ணகிரி  -  சி. முருகன்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad