காவல்துறையினர் உதவியுடன் பொதுபணிதுறையினர் அகற்றம் - பொதுமக்கள் எதிர்ப்பு
அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் பகுதியில் ஏரி ஆக்கிரமிப்புகளில் உள்ள வீடுகளை காவல்துறையினர் உதவியுடன் பொதுபணிதுறையினர் அகற்றம் - பொதுமக்கள் எதிர்ப்பு
சென்னையில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது இதனை தொடர்ந்து சென்னை முழுவதும்
உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் பகுதியில் உள்ள
அம்பத்தூர் ஏரி கரையோரும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
சுமார் 1986 ஆண்டு முதல் இப்பகுதியில் வசித்து வருகிறோம். இது அரசாங்கத்தால் எங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டது. இது வரை வரி எல்லாம் கட்டி வருவதாகவும், 5 அடி மட்டுமே எடுப்பதாக கூறி அளவு எடுத்தனர். ஆனால் தற்பொழுது 20 அடி வரை இடிப்பாதாகவும் இதனால் வீடுகளும் இடிப்பட்டு வாழ வழி இல்லாமல் இருப்பதாகவும் இதற்க்கு இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் , தமிழக அரசும் வாழ வழி வகை செய்யப்பட வேண்டும் கோரிக்கை வைத்தனர்.
எமது செய்தியாளர் : ரேவந்த் குமார்









கருத்துகள் இல்லை