Header Ads

  • சற்று முன்

    வாணியம்பாடியில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்


    வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு வட்டாட்சியர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். டிஎஸ்பி முரளி, காவல்ஆய்வாளர்கள் சுரேஷ், ராமச்சந்திரன், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் விட்டல்  மற்றும்  வாணியம்பாடி விநாயகர் சதுர்த்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிவப்பிரகாசம்  மற்றும் நகர இந்து முன்னணி பொறுப்பாளர்கள்  பாஜக நிர்வாகிகள் வாணியம்பாடி விநாயகர் சதுர்த்தி விழாக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் பொதுமக்கள்  என 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.விநயாகர் சிலைகள் வைக்கும் இடம், ஊர்வலம் செல்லும் பாதைகளில் உள்ள குறைபாடுகளை தவிர்ப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்,  அரசின் விதிமுறைகள் ஆகியவைகள் பற்றி வட்டாட்சியர் கிருஷ்ணவேனி, டிஎஸ்பி முரளி ஆகியோர் விளக்கி கூறினார்கள். தொடர்ந்து இந்து

    முன்னணி, பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் ஆலோசனைகள் வழங்கி பேசினார்கள்.நகராட்சி, மின்வாரியம், பொதுப்பணித்துறை மற்றும் தீயணைப்புத்துறை உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இறுதியில் அருள் நன்றி கூறினார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad