Header Ads

  • சற்று முன்

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்...


    ஆசிய விளையாட்டில் 49 கிலோ எடைபிரிவு குத்துச்சண்டை போட்டியில், ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி இந்திய வீரர் அமித் பங்கல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

    இந்தோனேசியாவின் பாலம்பெங், ஜகார்த்தா நகரங்களில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் நாள் தோறும் பதக்கங்களை வென்று வருகின்றனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற 49 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டை இறுதிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கலும், ஒலிம்பிக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற உஸ்பெகிஸ்தான் வீரர் டஸ்மேட்டோவ் ஹசன்பாய் ஆகியோர் மோதினர். தொடக்க சுற்று முதலே இருவருக்கும் கடும் மோதல் நடைபெற்ற நிலையில், இறுதியில் 3க்கு 2 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய வீரர் அமித் பங்கல் வெற்றிப்பெற்று, தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.


    இதன்மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் 14வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணி, பதக்கப் பட்டியலில் தொடர்ந்து 8வது இடத்தில் நீடிக்கிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad