Header Ads

  • சற்று முன்

    சென்னை அம்பத்தூரில் ஊனமுற்ற மற்றும் தாய் தந்தையை இழந்த ஏழை பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய அப்பகுதி மக்கள்.


    சென்னை அம்பத்தூர் அடுத்த பாடியில் உள்ள சீனிவாசா நகரில் தமிழ்நாடு குடிநீர் சுத்தகரிப்பு நலச்சங்கம் உள்ளது. இதன் மாநில பொது செயலாளர் பாபு அவர்கள் அந்த பகுதியில் அவரால் முடிந்த சிறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் தனது நண்பனின் மகளின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை முகநூலில் பதிவு செய்ததை தொடர்ந்து அவரது முகநூலில் ஒரு பதிவு வந்துள்ளது.  அப்பா அம்மா இல்லாத தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தி இருந்தார் 31 வயதான  கவிதா. இதனை தொடர்ந்து இன்று அவரது பிறந்தநாளை இன்று பாடி பெரியார்நகர் பகுதி மக்கள் ஒன்றுகூடி எளிமையான முறையில் கேக் வெட்டி கொண்டாடினர். அவர்களால் முடிந்த நிதி உதவியையும் வழங்கினர்.

    எமது செய்தியாளர் : கதிரவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad