Header Ads

  • சற்று முன்

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் விஷயத்தில் உச்சநீதிமன்ற தமிழக அரசு உடனடியாக தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும்



    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் விஷயத்தில் தமிழக அரசே முடிவு எடுக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை உணர்ந்து தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கழக துணைப்பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

    கழக துணைப்பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்யும் விஷயத்தில் தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்ற அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார். அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுதான் மாண்புமிகு அம்மாவின் விருப்பமாக இருந்ததென குறிப்பிட்டுள்ளார். அதை உணர்ந்து தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி இந்த 7 பேரையும் விடுவிக்கும்படி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தாமதமின்றி இதை செய்து உலகெங்கும் வாழும் தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றிட வேண்டும் என்றும் திரு டிடிவி தினகரன் டுவிட்டர் பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad