சென்னை அண்ணாநகரில் பாரத் பெட்ரோலியம் சார்பில் காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
சென்னை அண்ணாநகர் திருமங்கலம் பகுதியில் உள்ள பாரத் பெட்ரோலியம் தெற்கு வட்டார அலுவலகத்தின் சார்பில் காந்தியடிகளின் 150 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு செப்டம்பர் 15 முதல் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருமங்கலம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தை பற்றியும், தூய்மையின் அத்யாவசத்தை குறித்தும் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். மேலும் அங்கு இருந்த குப்பைகளையும் அகற்றினர்.
மனித வள துணை பொதுமேலாளர் M.V.ஷெனாய் தலைமையில் நடைப்பெற்ற இப்பேரணி சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தது. இந்த பேரணியில் பாரத் பெட்ரோலியத்தை சேர்ந்த 100 க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையாக கூத்துப்பட்டரையும் நடைப்பெற்றது.
மக்கள் தொடர்பு அலுவலர் ஆனந்தபத்மநாபன் ஒருங்கிணைப்பில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் மது சூதனராவ், விகாஷ் உள்ளீட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : கதிரவன்
கருத்துகள் இல்லை