தந்தை பெரியார் 140 ஆவது பிறந்தநாள்: தாயகத்தில் திருஉருவச் சிலைக்கும்; பெரியார் திடல் நினைவிடத்திலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் வைகோ
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 140 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தலைமை நிலையம் தாயகத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கும், பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் நினைவிடத்திலும் மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், மாவட்டச் செயலாளர்கள் கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, மா.வை.மகேந்திரன், டி.சி.இராஜேந்திரன், மகளிர் அணி மாநிலத் துணைச் செயலாளர் மல்லிகா தயாளன், மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர் துரை.மணிவண்ணன், கொள்கைவிளக்க அணி மாநிலத் துணைச் செயலாளர் ஆலந்தூர் செல்வராஜ், தலைமை நிலையத் துணைச் செயலாளர் மலுக்காமலி, இலக்கிய அணி மாநிலத் துணைச் செயலாளர் காட்வின் அஜூ, மதுரை மாநகர் மாவட்டத் தணைச் செயலாளர் தி.சுப்பையா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : பொன் முகரியன்
கருத்துகள் இல்லை