தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், அவரது ஆதரவாளர் அனைவருக்கும் ஜனாதிபதி சிரிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.கருணாநிதியின் மறைவினால் தாம் மிகுந்த துயர் அடைவதாக, மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இலக்கியம், சினிமா, அரசியல் ஆகிய துறைகளுக்கு கருணாநிதி ஆற்றிய பங்களிப்பு ஒப்பற்றது என முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்த நிலையில், கருணாநிதியின் இழப்பினால் வாடும் மில்லியன் கணக்கான மக்களுடன் தாமும் துயரைப் பகிந்து கொள்வதாக தனது ட்விட்டர் சமூக வலைத்தளப் பக்கத்தில் மகிந்த ராஜபக்ச தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.
கருத்துகள் இல்லை