டாஸ்மாக் கடைகள் வருமானத்தில் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் அமைச்சர் கே.சி.வீரமணி பரபரப்பு பேச்சு.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னமூக்கனூரில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் ஜோலார்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி. வீரமணி பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அமைச்சர் வீரமணி பேசி கொண்டு இருக்கும்போது தீடீரென அதிமுக தொண்டர் ஒருவர் மது போதையில் ரகளையில் ஈடுபட்டார். அந்த அதிமுக தொண்டரால் பாதியில் பேச்சை நிறுத்திய அமைச்சர் போலிஸ் போலிஸ் என்று அழைத்து அவரை அப்புறப்படுத்த சொன்னார். அதன்பின் தனது பேச்சை தொடர்ந்தார் அப்போது அமைச்சர் டாஸ்மாக் கடை விற்பனை லாபத்தால் தான் ஆசிரியர்களுக்கு தான் சம்பளம் கொடுத்து கொண்டு இருக்கிறோம் என்று ஆசிரியர்கள் மத்தியில் பேசிய பேச்சு ஆசிரியர்கள் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் இடையே முகம் சுழிக்க வைத்தது. அமைச்சரின் இந்த பேச்சால் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள் இல்லை