குவிந்துகிடக்கும் குப்பைகள் தொற்று நோய் பரவும் அபாயம் !!!
திருவள்ளூர் மாவட்டம் காந்தி நகர் T.H. பிரதான சாலையில் குவிந்துகிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அச்சத்தில் காந்திநகர் பகுதி 3க்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் சாலையில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளால் அதிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் சாலையை கடந்து செல்ல மூக்கை பிடித்து செல்ல வேண்டிய நிலை உருவாகிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முதல் பணிக்கு செல்பவர் வரை கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குப்பைகளில் உள்ள கழிவுகளை தின்ன மாடுகள் மேய்கின்றன. தீடிரென சாலைக்கு வருவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகுள்ளகின்றனர்.மேலும், இதில் அழுகிய இறைச்சி போன்ற கழிவுகளால் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி துரித நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கின்றனர்.
கருத்துகள் இல்லை