விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 56 வது பிறந்தநாள் விழா
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 56-வது பிறந்தநாள் விழா திருவாரூரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
தொல்.திருமாவளவனின் ஆணைக்கினங்க 5 ஆயிரம் பனை விதைகள் வழங்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக ஓடம் போக்கி ஆற்றாங்கரையில் மாவட்ட செயலாளர் வடிவழகன் தலைமையில் 56 பனை விதைகள் நடப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு 56 தென்னங்கன்றுகள், 56 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனாக்கள் வழங்கப்பட்டது. தொல்.திருமாவளவனின் 56-வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் 56 கி.கி கேக் வெட்டி விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட செயலாளா; வடிவழகன் தலைமையில் நடைபெற்ற இந்த பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சரும் கீழ்வேளூர் ; சட்டமன்ற உறுப்பினருமான உ.மதிவானன், தொழிலதிபார் எஸ்.டி.ஜெகதீசன்ரூபவ் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பொன்.சிறைச்செல்வன், பூபாலன், சேதுராமன், இளங்கோவன், சுப்பு, பா.நிலவன்,,சந்திரபோஸ், மனோகரன்,பிரேமா, கணேசன், ரகுவரன், சுந்தரபாண்டியன், வீரையன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர் . இந்நகழ்ச்சியை தொடா;ந்து வடக்கு மாவட்ட மாவட்ட செய்தி தொடா;பார் தங்கத்தமிழ்ச்செல்வன் தலைமையில் விளமலில் தமிழர்களின் பாரம்பரியம் பாதுகாக்க பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் அப்பு வினோத் மாதவன் பிரதாப் மகேந்திரன் மற்றும் நகர கிளை ஒன்றிய செயலாளா;களும் கலந்துக்கொண்டனார் .
கருத்துகள் இல்லை