Header Ads

  • சற்று முன்

    லாரிகள் வேலை நிறுத்தத்தால் தீ பெட்டி தொழில்கள் முடக்கம்



    கடந்த 4 நாள்களாக நடைபெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார்
    100 கோடி ரூபாய்; மதிப்பிலான தீப்பெட்டிகள் பண்டல்கள் தேக்கமடைந்துள்ளன. ஜீ.எஸ்டியினால் கடுமையாக பாதிக்கப்பட்டு தீப்பெட்டி தொழில் தொடர்ச்சியான லாரி ஸ்டிரைக், வட மாநிலங்களில் மழையின் காரணமாக தீப்பெட்டி தொழில் முடங்கியுள்ளதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேஷனல் சிறு தீப்பெட்டி
    உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலை, கயத்தார; விருதுநகர் மாவட்டம் சாத்தூர; சிவகாசி, ஏழாயிரம்பண்ணை, நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில், திருவேங்கடம்ரூபவ் வேலூர் மாவட்டம் குடியாத்தம், தர்மபுரிமாவட்டம் காவேரிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் தீப்பெட்டி தொழில் நடைபெற்று வருகிறது. இதனை நம்பி நேரடியாக 4 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 2லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பயன் அடைந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 300 பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும்ரூபவ் 25 முழு இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும்ரூபவ் 2000க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றனர;. தமிழகத்தில் இருந்து பெரும்பாலும் வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அதிகளவில் தீப்பெட்டி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக டில்லி, பஞ்சாப், ஹரியானா, குஜராத்  உத்திரபிரேதசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் நோபாளம்ரூபவ் பு+டான் உள்ளிட்ட
    நாடுகளுக்கு தரைமார்க்கமாக லாரிகள் மூலமாக தீப்பெட்டி பண்டல்கள் அனுப்பட்டு வருகின்றன. வெளி நாடுகளுக்கு தூத்துக்குடி துறைமுகம்மூலமாக பண்டல்கள் அனுப்பட்டு வருகின்றன. சமீப காலமாக மூலப்பொருள்களின் விலையேற்றம், தீப்பெட்டிபண்டல்களுக்கு சரியான விலைக்கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் நலிவடைந்து வந்த இந்த தொழிலுக்கு ஜீ.எஸ்.டிவரி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் கடந்த 4 நாள்களாக நாடு முழுவதும் பெட்ரோல், டிசல் விலை
    உயற்வினை கண்டித்து லாரி உரிமையாளர;கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளதால் தீப்பெட்டி பண்டல்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட நிலையில்ரூபவ் தற்போது லாரிகள்வேலை நிறுத்தம் காரணமாக சுமார; 75 கோடி ரூயஅp;பாய் முதல் 100 கோடி ரூபாய்தீப்பெட்டி பண்டல்கள் தேக்கமடைந்துள்ளதாக கோவில்பட்டியில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர;கள் சங்க செயலாளர் சேதுரத்தினம் தெரிவித்துள்ளனர். தீப்பெட்டி பண்டல்கள் குடோன்களில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.வடமாநிலங்களில் இதனால் தீப்பெட்டி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்து லாரி ஸ்டிரைக்க நடந்தால் ஆலைகளை மூடி தொழிலாளர;களுக்கு விடுமுறை விடுவதை தவிர வேற வழியில்லை என்கின்றனர; உற்பத்தியாளர;கள். ஏற்கனவே குடோன்களில் தேக்கி வைக்கப்பட்ட பண்டல்களை தவிர வெளியேயும்ரூபவ் அலுவலகங்களிலும் பண்டல்களை வைக்கும் நிலை உள்ளதால் தொடர;ந்து உற்பத்தி செய்தால் பண்டல்களை எங்கு கொண்டு வைப்பது என்ற நிலை ஏற்படும் எனவே ஆலைகளை மூடி விடுமுறை விடுவதை தவிர வேறு வழியில்லை என்கின்றனர;. இதனால் சுமார; 6லட்சம் தொழிலாளர;கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தீப்பெட்டி தொழில் மட்டுமின்றி டிரான்ஸ்போர;ட் தொழிலும் முடங்கி போய் உள்ளது. ஏற்கனவே புக் செய்தவர்களுக்கு பண்டல்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், புதியதாக புக் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் கூறுகின்றனர் டிரான்ஸ்போர்ட் உரிமையார்கள், எனவே அரசு லாரி ஸ்டிரைக் போராட்டத்தினை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்..


    watch nms today channel

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad