Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே திமுக நிர்வாகி விஷம் அருந்தி தற்கொலை



    கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் கான்சபுரத்தினை சேர்ந்த செல்வக்குமார் என்ற திமுக நிர்வாகி, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலக்குறைவு செய்தி கேட்டு கடந்த சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்ட நிலையில், அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் கான்சபுரத்தினை சேர்ந்த அழகுராஜா என்பவரது மகன் செல்வக்குமார்,விவசாய கூலி வேலை செய்து வந்த இவர் 13வது வார்டு திமுக பிரதிநிதியாக உள்ளார். இவர் மட்டுமல்ல, இவரது குடும்பமே திமுகவில் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 4 தினங்களாக திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலைப்பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதி உடல் நிலை பாதிக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டதில் இருந்து செல்வக்குமார் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகி, வீட்டில் புலம்பிகொண்டே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு செல்வக்குமார் கோவில்பட்டிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டு வாசலுக்கு வந்ததும் செல்வக்குமார் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினை அவரை தூக்கி கொண்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலே செல்வக்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.


    கருணாநிதி உடல் நிலை கேட்டதில் இருந்து மனமுடைந்து காணப்பட்ட செல்வக்குமார், கோவில்பட்டியில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்று சென்று மதுவுடன் விஷம் கலந்து குடித்து விட்டு வீட்டிற்கு வந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல் கிடைத்தும் எட்டயபுரம் போலீசார் செல்வக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா. திமுக தீவிர விசுவாசியாக இருந்த தொண்டனை இழந்து விட்டதாக திமுகவினர் தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட செல்வக்குமாருக்கு அருணாச்சலவடிவு என்ற மனைவியும், அழகுராஜா என்ற மகனும், அன்னலெட்சுமி என்ற மகளும் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad