Header Ads

  • சற்று முன்

    துக்க வீட்டில் ஏற்பட்ட தகராறு அரிவாள் வெட்டில் முடிந்தது


    கோவில்பட்டி அருகேயுள்ள சுந்தரலிங்கபுரத்தில் துக்க வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக சிவனைந்தபுரம் பகுதி இருதரப்பினர் மோதி கொண்டதில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.இந்த சம்பவம்
    தொடர்பாக முத்துகுருசாமி மற்றும்  ராமமூர்த்தி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    தூத்துக்குடி மாவட்டம் அருகேயுள்ள சுந்தரலிங்கபுரத்தில் குருவாம்மாள் என்ற மூதாட்டி வயது மூப்பு காரணமாக இறந்து விட்டார். இவருடைய துக்க வீட்டிற்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த இருதரப்பினர்க்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறில் முடிந்தது.  உறவினர்கள் தலையீட்டு இருதரப்பினைரையம் சமதானப்படுத்தியுள்ளனர;. இதையெடுத்து மூதாட்டி உடல் அடக்கம் செய்யபட்டது. இறுதி நிகழ்ச்சி முடிவு பெற்றது ஒரு தரப்பினை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள சிவனைந்தபுரம் கிராமத்திற்கு சென்ற போது, மற்றொரு தரப்பினை சேர்ந்த  முத்துகுருசாமி, ராமமூர்த்தி இருவரும் வழிமறிந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினரும் தங்கள் கையில் இருந்த அரிவாளால்
    வெட்டிக் கொண்டனர்.;. இதில் கிருஷ்ணசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.முத்துகுருசாமிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்றஉடன் முத்துகுருசாமி மற்றும் ராமமூர;த்தில் இருவரும் தப்பியோடியதாக தெரிகிறது. படுகாயமடைந்த கிருஷ்ணசாமியை அப்பகுதி மக்கள் மீட்டு
    சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவருக்கு அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு,  மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார;.
    இந்த சம்பவம் குறித்து சாத்தூர் தாலூகா போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடி முத்துகுருசாமி, ராமமூர்த்தி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad