18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் விசாரிக்க புதிய நீதிபதி விமலா நியமனம்
டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த வியாழக்கிழமை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், சபாநாயகர் உத்தரவு செல்லாது என்றும் நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதனால் வழக்கு 3வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கை 3வது நீதிபதி விமலா விசாரிப்பதற்கு, நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரி 10 ஆம் தேதியுடன் நீதிபதி விமலா ஓய்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை