Header Ads

  • சற்று முன்

    விடுமுறை நாட்களில் விரைவு மின்சார இரயில் இயக்ககோரி 500 மேற்பட்டோர் தாம்பரம் தண்டவாளத்தில் திடீர் மறியல்


    விடுமுறை நாட்களிலும் விரைவு மின்சார ரயில்களை இயக்கக்கோரி தாம்பரம் ரயில் நிலையத்தில் ஐநூறுக்கு மேற்பட்ட   பயணிகள் திடீர்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  



    செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் தாம்பரம், பல்லாவரம், கிண்டி போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். இதனால் இந்த ரயிலில் பயணிப்பவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக சென்று விட முடியும். இந்த விரைவு மின்சார ரயில்களை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சாதாரண மின்சார ரயில்களாக இயக்குவதாக கூறப்படுகிறது- இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாம்பரத்தில், பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைவு மின்சார ரயிலை சாதாரண ரயிலாக இயக்குவதால் தாங்கள் அலுவலகம் செல்ல தாமதமாவதாக கூறி இரண்டு ரயில்களை அவர்கள் சிறை பிடித்தனர்.
    சுமார் 500 பேர் தண்டவாளத்தை மறித்து போராட்டம் நடத்தியதால் தாம்பரம் - கடற்கரை இடையிலான மார்க்கத்தில் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது- போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயணிகளிடம் ரயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad