Header Ads

  • சற்று முன்

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்



    தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மே 3ம் தேதி நடக்கிறது.
    இதுகுறித்து வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம் மே 3ம் தேதி மாலை 6 மணிக்கு தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் என்.கே.பெருமாள் தலைமையில் செல்வராஜ் முன்னிலையில் நடக்கிறது. இதில் மே 26ம்தேதி முன்னாள் மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் முதலாமாண்டு நினைவுநாள் குறித்தும், கழக வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்படுகிறது. 

    இதில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டுகிறேன். மேலும் மாலை 5 மணிக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அபிராமி நாதன் தலைமையில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் முன்னிலையில் நடக்கிறது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ சிறப்புரையாற்றுகிறார். இக்கூட்டத்திலும் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad