காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதிஷ் குமார்
ஆஸ்திரேலியா கொள்கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மூன்றாவது நாளான இன்று பளு தூக்கும் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வேலூர் மாவட்டம் சத்துவசாரியை சேர்ந்த இவர் 72 கிலோ பளு தூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். தமிழக முதல்வர், ஆளுனர் வாழ்த்துக்களை தெரவித்துள்ளார். இவரது பெற்றோர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிபடுதுகின்றனர். சதீஷ்குமார் ஏற்கனவே ஸ்காட்லாந்தில் குலோஸ்கோ நகரில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது நடைபெற்று வரும் காமன் வெல்த் போட்டியில் 3 தங்க பதக்கமும், 2 வெள்ளி பதக்கமும் பெற்று இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
கருத்துகள் இல்லை