Header Ads

  • சற்று முன்

    விளாத்திகுளத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா : திமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு



    விளாத்திகுளத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா 9ம் திருநாள் ரெட்டியர் சமுதாய மண்டகப்படியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் மற்றும் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.கே எஸ். எஸ். ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு மாட்டு வண்டி  பந்தயத்தை துவக்கி வைத்தனர். மற்றும் மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கி சிறப்புறையாற்றினர்.

     இந்நிகழ்ச்சியில் திமுக  விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் வேலாயுதபெருமாள் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்  தூத்துக்குடி மாநாகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் வசந்தம்ஜெயக்குமார், கோவில்பட்டி நகர செயலாளர் காருணநிதி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இம்மானுவேல் மற்றும் விளாத்திகுளம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் லெனின்  மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad