கோவில்பட்டியில் போக்குவரத்து காவலர்களுக்கு வெயிலை சாமளிக்க எலுமிச்சை பழச்சாறு வழங்கும் நிகழ்ச்சி
கோடைகாலம் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டும், வெயிலில் இருந்து போக்குவரத்து பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களை பாதுகாக்கவும், வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து காவலர்களுக்கு தினமும் காலை,மதியம், மாலை 3 வேளையும் எலுமிச்சை பழச்சாறு, இளநீர் மற்றும் பழங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி கோவில்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே நடைபெற்றது. இதில் டி.எஸ்.பி.ஜெபராஜ் கலந்து கொண்டு போக்குவரத்து காவலர்களுக்கு எலுமிச்சை பழச்சாறு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் சுடலைமுத்து மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை