Header Ads

  • சற்று முன்

    ஆளுநர் பன்வாரி லால் புரோகித் டெல்லி விரைந்தார்.


    தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி விரைந்துள்ளார். 
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்சியினரும், விவசாய, வணிக அமைப்புக்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. உண்ணாவிரதம், கறுப்புக் கொடி, முழு அடைப்பு, ரயில், சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளள.
    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஞாயிறன்று தமிழக தலைமைச் செயலாளர், காவல்துறை டி.ஜி.பி., தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து அப்போது கேட்டறிந்ததாகக் கூறப்படும் நிலையில் இரவு 7.10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
    தமிழகத்தில் போராட்டங்கள் வலுக்கும் நிலையில் ஆளுநரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad