Header Ads

  • சற்று முன்

    k-2 காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் தற்கொலை !!



    சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக  பணிபுரியும் சதீஷ் அதிகாலை தனது கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே மேலையூரை சேர்ந்தவர்.சதிஷ் குமார் வயது 33 இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு காவல் பணியில் நேரடி உதவி ஆய்வாளராக  (சட்ட ஒழுங்கு பிரிவில் )   பணியில் அமர்ந்தார். இவர் சென்னை T.P. சத்திரம் காவலர் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இவரது தாயார் பெயர் அம்பிகா, உடன் பிறந்தவர்கள் அண்ணன் கணேஷ், தம்பி செல்வகுமார் ஆவர்.

    தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லையென்று கடிதம் எழுதி வைத்துள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கொண்டு உயர் அதிகாரிகள் விசாரணை  செய்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad