வேளச்சேரியில் போதை பொருட்கள் விற்பனை செய்த வட மாநிலத்தவர் கைது !
வேளச்சேரியில் போதை பொருட்கள் தயாரித்து விற்பனை செய்த வடமாநில இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேளச்சேரி நேருநகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியின் போது அங்கே சந்தேகத்திற்கு இடமான மூன்று இளைஞர்கள் நின்றிருப்பதை கண்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சோனுக்குமார், அசோக்சா, சவரப்குமார் என்பதும், அவர்கள் மூவரும் வேளச்சேரி பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதும் தெரிவந்தது. இதை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை