Header Ads

  • சற்று முன்

    இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்


    இராமநாதபுரம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை தகவல் தொழிற் நுட்பவியல் துறை மற்றும்  வேலை வாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. 

    இந்த சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் 70 நிறுவனங்கள் கலந்து கொண்டன. ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் மிகுந்த எதிர்பார்புகளுடன் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து வந்த வண்ணம் உள்ளனர்.


    பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருப்பதை காணமுடிகிறது. மேலும் வேலை வாய்ப்பு கேட்டு விண்ணப்பிக்க வந்துள்ளவர்களுக்கு அவர்கள் தாங்கள் விரும்பும் கம்பெனிகளை தேர்வு செய்யவும் விண்ணப்பங்களை சரிபார்த்து பூர்த்தி செய்ய போதுமான இடவசதி இல்லாததால் ஆங்காங்கே மரத்தடியில்  அமர்ந்து எழுதுகின்றனர் 


    இங்கு வெயில் கொடுமையை பொருட்படுத்தாமல் மரத்தடியில் கூட்ட  கூட்டமாக நிற்பதை பார்க்கமுடிகிறது. அடிப்படை வசதிகள் கூட முறையாக செய்யவில்லை என்று வருபவர்கள் தெரிவிக்கின்றனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad