பிப்.24 பிரதமர் மோடி சென்னை வருகை
சென்னை: பிப்.24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்.24-ம் தேதி தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ள ஸ்கூட்டர் மானிய திட்டத்தை துவக்கிவைக்க பிரதமர் மோடி சென்னை வருகிறார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். புதுச்சேரியில் சர்வதேச நகரமான ஆரோவில் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதற்கான பொன் விழாவில் பங்கேற்க மோடிக்கு, புதுவை அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பின்படி பிரதமர் வரும் 24ஆம் தேதி புதுவை வரவுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளும் அதே தினம் என்பதால், அன்றைய தினத்தில் தமிழக அரசின் மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 24ஆம் தேதி புதுவை வரும் மோடி, ஆரோவில் பொன்விழா நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழக அரசின் மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் தொடக்க நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது
கருத்துகள் இல்லை