அடையாளம் தெரியாத பெண் சடலம் !! போலீஸ் தீவிர விசாரணை ...
ராமாநாதபுர மாவட்டம் திருவாடானை தளிர் மருங்கூர் பெரிய கண்மாயில் பாதி எரிந்த நிலையில் பெண் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 வயது மதிக்கதக்க வகையில், பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் பிணம். தகவல் அறிந்த திருவாடானை டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் தொண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகம் முழுவதும் எரிந்துள்ளதால் பெண்னை அடையாளம் காண்பதில் காவல்துறை அதிகாரிகளுக்கு சிரமமாக உள்ளது இச் சம்பவம் தொடர்பாக தொண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா - தற்கொலையா என்கிற கண்ணோட்டத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை