டி.டி.வி.தினகரன் வழக்கு நாளை ஒத்திவைப்பு
புதுடில்லி: தனது அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என தினகரன் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தினகரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,தினகரன் அணிக்கு,
1. அனைத்திந்திய அம்மா திராவிடமுன்னேற்ற கழகம்
2.எம்ஜிஆர் அம்மா திராவிடர் முன்னேற்ற கழகம்
3. எம்ஜிஆர் அம்மா திராவிடர் கழகம் ஆகிய 3 பெயரில் ஒரு பெயரை ஒதுக்க வேண்டும். புதிய கட்சியை தற்போது பதிவு செய்வது சாத்தியமல்ல. தேர்தல் ஆணையம் இடைக்கால ஏற்பாடு செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்காக கட்சி பெயர் கேட்கவில்லை. அனைத்து தேர்தலுக்கும் ஒதுக்க வேண்டும் என வாதிட்டார்.
முதல்வர் பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. தேர்தல் அறிவிப்பு மே முதல் வாரத்தில் வெளியிட வாய்ப்பு உள்ளது. தொகுதிகளை மறுவரையறை செய்யும் பணி முடிவடைய மேலும் ஒரு மாத காலமாகும் என கூறப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணையை நாளைக்கு கோர்ட் ஒத்திவைத்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தினகரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,தினகரன் அணிக்கு,
1. அனைத்திந்திய அம்மா திராவிடமுன்னேற்ற கழகம்
2.எம்ஜிஆர் அம்மா திராவிடர் முன்னேற்ற கழகம்
3. எம்ஜிஆர் அம்மா திராவிடர் கழகம் ஆகிய 3 பெயரில் ஒரு பெயரை ஒதுக்க வேண்டும். புதிய கட்சியை தற்போது பதிவு செய்வது சாத்தியமல்ல. தேர்தல் ஆணையம் இடைக்கால ஏற்பாடு செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்காக கட்சி பெயர் கேட்கவில்லை. அனைத்து தேர்தலுக்கும் ஒதுக்க வேண்டும் என வாதிட்டார்.
முதல்வர் பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. தேர்தல் அறிவிப்பு மே முதல் வாரத்தில் வெளியிட வாய்ப்பு உள்ளது. தொகுதிகளை மறுவரையறை செய்யும் பணி முடிவடைய மேலும் ஒரு மாத காலமாகும் என கூறப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணையை நாளைக்கு கோர்ட் ஒத்திவைத்தது.
கருத்துகள் இல்லை