பேருந்து கட்டண உயர்வை கண்டித்து AISF - ன் அமைப்பினர் சாலை மறியல் போராட்டம் !!
சென்னை அண்ணா சாலை அண்ணா சிலை எதிரில் வாலாஜா சாலை சந்திப்பில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மாநில செயலாளர் தினேஷ் தலைமையில் வட சென்னை தலைவர் த. அன்பரசு, தென் சென்னை தலைவி அருணா பாரதி முன்னிலையில் தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய கோரியும் முழக்கமிட்டனர்.
சாலையில் படுத்து மறியிலில் ஈடுபட்ட மாணவனை காவல் துறையினர் குண்டுகட்டையாக தூக்கி பேருந்தில் ஏற்றினார். மேலும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களை காவல் துறையினர் சிறை பிடித்து பேருந்தில் ஏற்றினர்.
கருத்துகள் இல்லை