Header Ads

  • சற்று முன்

    பெட்ரோல் பங் ஊழியர்கள் முயற்சி பெரும் விபத்து தவிர்ப்பு !


    கிருஷ்ணகிரி அருகே பெட்ரோல் பங்கில் நிரப்புவதற்கு பெட்ரோல் எடுத்து வந்த லாரியில் திடீர் தீ விபத்து - ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அனைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு

    கிருஷ்ணகிரி அடுத்த அழகுபாவி கிரமத்தில் இருந்து சூளகிரி செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ளது ஹச்.பி பெட்ரோல் பங்க். இந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவதற்கு டேங்கர் லாரி ஒன்று பங்கிற்கு வந்து நின்றது. அப்போது லாரியின் பின் சக்கரம் திடீரென்று தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை கண்ட பெட்ரோல் பங்கு ஊழியர்கள் உடனடியாக அங்கு இருந்த மணல்களை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.



    இன்று பெட்ரோல் பங்கு சார்பில் எண்ணெய்கள் மூலம் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அனைப்பது என்ற ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியதால் பெட்ரோல் பங்கில் இருந்த தீயணைப்பு கருவிகள் நிகழ்ச்சிக்கு எடுத்து செல்லப்பட்டு இருந்தது. பின்னர் தீ விபத்து ஏற்பட்டது குறித்து தகவல் அறிந்த மற்ற ஊழியர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தீயணைப்பு கருவிகளை கொண்டு வந்து உடனடியாக தீயை அனைத்தனர். இங்கிருந்து தீயணைப்பு நிலையம் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் தீயணைப்பு வாகனம் எதுவும் வரவில்லை.



    தீ பிடித்த எரிந்த டேங்கர் லாரி முழுவதும் பெட்ரோல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் சிறிது நேரம் கால தாமதம் ஏற்பட்டு இருந்தால் தீயின் வெப்பத்தால் டேங்கர் லாரி வெடித்து மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்க கூடும். நிலமையை அறிந்த பெட்ரோல் பங்கு ஊழியர்கள் விரைந்து செயல்பட்டதால் மிகப்பெரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad