Header Ads

  • சற்று முன்

    பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்



    அம்பத்தூர், கொரட்டூர்  ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்திருக்கும் பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் 10 பேர் கொண்ட மாணவர்கள் தாக்கியதில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
    இன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வந்த ரயிலில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் கையில் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் பயணிகளை மிரட்டியுள்ளனர்.

    பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில், ரயில் நின்றதும், அதில் இருந்து அலறி அடித்துக் கொண்டு பயணிகள் இறங்கி ஓடிய நிலையில், ஆயுதங்களுடன் ஓடிய 10க்கும் மேற்பட்ட  மாணவ கும்பல், மற்றொரு மாணவர் கும்பலை சரமாரியாகத் தாக்கியது. இதில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.

    காயமடைந்த மாணவர்களை பயணிகள் மீட்டு அம்பத்தூர் ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மாணவர்கள் கும்பலுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த மோதல் நடந்ததா என்றும், சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று மாணவர் கும்பலுக்கு இடையே நடந்த மோதலின் தொடர்ச்சியா இது என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    சம்பவ இடத்துக்கு காவல் ஆய்வாளர் பட்டையம்மாள் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad