Header Ads

  • சற்று முன்

    எச் ராஜாவுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கவுன்டர் !!



    சென்னை : வைரமுத்துவை தரம் தாழ்ந்த சொற்களால் விமர்சிக்க பாஜக தேசிய செயலாளர் ச்.ராஜாவிற்கு என்ன உரிமை இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.

    கவிஞர் வைரமுத்து எழுதிய ஆண்டாள் தொடர்பான கட்டுரை சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் வெளியானது. அதில் ஆண்டாள் குறித்த தவறான கருத்துகளை தெரிவித்து இருப்பதாக வைரமுத்து மீது விமர்சனம் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மன்னிப்பு கோரி உள்ளார்.
    இருப்பினும் பா.ஜ.க தேசிய செயலாளரான எச்.ராஜா தொடர்ந்து வைரமுத்துவை விமர்சனம் செய்து வருகிறார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில்,
    மன்னிப்பு கேட்ட பிறகும் விமர்சனம் தமிழின் ஆண்டாள் என்கிற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கட்டுரையை முன் வைத்து எச்.ராஜா தரம் தாழ்ந்த சொற்களால் கவிஞர் வைரமுத்துவைத் தாக்கிப் பேசியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத செயலாகும். ஆண்டாளை இழிவுப்படுத்தவில்லை என்பதைத் தெளிவுபடுத்தி எவரையும் புண்படுத்துவது தனது நோக்கமல்ல யாரேனும் புண்பட்டிருந்தால் வருந்துவதாக அவர் கூறிய பின்னரும் பாரதிய ஜனதா கட்சியினர் அவரை இழிவாகப் பேசுவதையும் மிரட்டுவதையும் அக்கட்சியின் உயர்ந்த பொறுப்புகளில் இருப்பவர்கள் எவ்வகையில் ஏற்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad