Header Ads

  • சற்று முன்

    நாஞ்சிலாருக்கு ஜெயா கொடுத்த கார் இப்போது கைமாறியது



    திராவிட இயக்கத்தின் சிறந்த பேச்சாளரும், மதிமுகவின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்த நாஞ்சில் சம்பத் ‘இன்னோவா சம்பத்’ என்று அழைக்கப்பட காரணமாக இருந்த நிகழ்வை யாரும் மறக்க முடியாது. மதிமுகவில் இருந்து வெளியேறிய அவர் அதிமுகவில் இணைந்ததும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவருக்கு இன்னோவா காரை பரிசளித்தார் அன்று முதல் அவரை இன்னோவா சம்பத் என்று அழைத்தார்கள். பின்னர் அவர் மறைந்து அதிமுக பிளவு பட்ட நிலையில், நாஞ்சித் சம்பத் தினகரன் அணியில் இருந்து வருகிறார்.
    ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் இருந்தும் ஒபிஎஸ்-இபிஎஸ் அணியினர் படுதோல்வி அடைந்த நிலையில், அதிரடியாக தினகரன் வென்றார். இதனால் தினகரன் அணி ஆதரவாளர்கள் அத்தனை பேரையும் நீக்கி வருகிறார். நாஞ்சில் சம்பத்தும் நீக்கப்பட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை அதிமுக அலுவலகத்தில் திரும்ப ஒப்படைத்த நிலையில், நாஞ்சில் சம்பத் திரும்பக் கொடுத்த காரை தன் பெயரில் பதிவு செய்துள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad