வேதாரண்யத்தில் கடலில் மூழ்கி நான்கு இளைஞர்கள் பலி !!
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தை அமாவாசையை முன்னிட்டு கடலில் ஆழமான பகுதிக்கு சென்று புனித நீராடிய 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கொண்டிருந்த நிலையில், மீனவ கிராமமான ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் படகு மூலம் வேதாரண்யம் சென்றனர். கடலின் நடுப்பகுதிக்கு சென்ற அவர்கள் குளிக்க முயன்றனர். ஆனால் குதித்த இடம் சேறாக இருந்ததால் நீச்சல் அடிக்க முடியாமல் திணறினர். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டனர்.
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த பிரவீண்குமார் , பரத், யுகேந்திரன், கணிஷ்கர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் வேதாரண்யம் மற்றும் நாகை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்துகள் இல்லை