Header Ads

  • சற்று முன்

    அரசியல் களத்தில் விஷால்...... ஆர்.கே.நகரில் போட்டியிடுவதாக அறிவிப்பு



    சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.சுயேட்சை வேட்பாளராக விஷால் களமிறங்குகிறார். இதன் மூலம் விஷால் அதிகாரப்பூர்வமாக அரசியலில் குதித்துவிட்டார். ஜெ. மறைவால் காலியான ஆர்.கே.நகரில் வரும் 21ம் தேதி, இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அதிமுக சார்பில் மதுசூதனன் களமிறங்குகிறார். திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். இதுதவிர சுயேட்சையாக தினகரன் போட்டியிட உள்ளார். நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் கலைக்கோட்டுதயம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் 



    இதனிடையே, திடீர் வரவாக தென் இந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளரான விஷால் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். வரும் திங்கள்கிழமை அவர் மனு தாக்கல் செய்ய உள்ளார்.

    ராஜேந்திர பாலாஜி சாடல் 



    விஷாலுக்கு அரசியல் வாழ்வு மட்டுமல்ல, திரைப்பட வாழ்வும் அஸ்தமிக்கப்போகிறது என்று கூறியுள்ளார், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. எம்ஜிஆர், ஜெயலலிதா போல திரையுலகில் இருந்து வந்து அரசியலில் ஜெயிக்க முடியாது என்று அமைச்சர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad