Header Ads

  • சற்று முன்

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு



    சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், சுயேச்சையாக டிடிவி தினகரன், விஷாலும் போட்டியிடுகின்றனர்.

    இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் கடந்த வாரம் தொடங்கியது. இந்நிலையில் இன்று அதற்கான இறுதி நாளாகும். இன்றைய தினம் தீபாவும், விஷாலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர். தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று ஆசி பெற்றுக் கொண்டு அவர் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகள் நாளை பரிசீலனை செய்வர். வேட்புமனுக்களை வாபஸ் பெற 7ஆம் தேதி கடைசி நாளாகும். இடைத்தேர்தலில் 7 முனை போட்டி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ஆர்.கே.நகரில் குத்தாட்டம், கொண்டாட்டம் என தேர்தல் பிரச்சாரம் களைக் கட்ட தொடங்கிவிட்டது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad